காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

author img

By

Published : Aug 6, 2022, 7:45 PM IST

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

மகளிர் காமன் வெல்த் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செமி - பைனலில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பர்மிங்காம் : இந்தியா இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான காமன் வெல்த் கிரிக்கெட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தானா 61 ரன்களும், ஜெமிமா ராட்ரிகியூஸ் 44* ரன்கள் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நடாலி ஸ்கிவர் 41 ரன்களும். டானியல் வியாட் 35 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: IND vs WI: தொடரை வெல்லுமா ரோஹித் & கோ... இன்று 4ஆவது டி20!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.