இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!

author img

By

Published : Jul 20, 2021, 7:46 AM IST

Updated : Aug 17, 2021, 8:39 AM IST

Pegasus

இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸை ஒரு முறை கணினியிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ நிறுவினால் அதை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்கிறார் மூத்த செய்தியாளர் சஜ்ஜிப் கேஆர் பரூவா.

டெல்லி: இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருளான பெகாசஸ் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஒரு முறை இதனை கணினியிலோ அல்லது வேறு ஏதேனும் மின்னணு சாதனத்திலோ நிறுவிவிட்டால் அதனை நீக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இந்நிலையில்தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான உளவுத் தகவல்கள் திருட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஒன்றிய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் என பலரும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். இந்த சர்ச்சை நாட்டையை உலுக்கிவருகிறது.

முன்னதாக, 2015ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விற்பனையாளர் ஒருவருடன் ஆப்பிரிக்க நாடு ஒன்று ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் நகலை ஈடிவி பாரத் அணுகியது. அப்போதுதான் பெகாசஸ் ஒப்பந்தம் எவ்வளவு கடினமானது என்பதை அறிய முடிந்தது.

பல்வேறு துணை தலைப்புகளில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக நிலைத்தன்மை உள்ளது. பொதுவாக ஒரு கருவியில் உள்ள முதன்மை தகவல்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டாலும் மீட்கமுடியும். ஆனால் பெகாசஸ் ஒப்பந்தத்தின்படி மொத்த இரகசியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த நிறுவனம் என்எஸ்ஓ ( Niv, Shalev and Omri) குழும டெக்னாலஜி லிமிடெட்டில் பதியப்பட்டுள்ளது. இதன் பதிவு எண் 514395409 ஆகும். இந்த மென்பொருளை வாங்கியதும், இரண்டு வார பயிற்சி மற்றும் ஒரு வாரம் ஆன்-சைட் ஒப்படைப்பு படிப்பை வழங்க என்எஸ்ஓ ஒப்புக்கொள்கிறது.

மென்பொருளின் திறனின் மற்றொரு அம்சம் என்னவெனில் கணினி அல்லது தொலைபேசியில் பதிவுகளைக் கண்டறிதல், பதிவுசெய்தல் மற்றும் பரிமாற்றம் செய்வது, இது குறுஞ்செய்தியைக் கண்காணிப்பதன் மூலம் முக்கியமான கணக்குகளுக்கான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை அறிந்துகொள்கிறது.

உளவு சேகரிப்பு கருவி அனைத்து தொடர்பு விவரங்கள், எஸ்எம்எஸ், மின்னஞ்சல்கள், அழைப்பு பதிவுகள், வாட்ஸ்அப் அழைப்பு பதிவு, ஸ்கைப் அழைப்பு பதிவுகள் போன்றவற்றின் நேரம் மற்றும் வரலாற்று தரவை பிரித்தெடுக்கிறது.

தவிர இலக்கு சாதனத்தின் கேமராவிலிருந்து செயலில் தரவு சேகரிப்பை செயல்படுத்துகிறது. இதிலுள்ள மற்றொரு சுவாரஸ்யமான திறன் என்னவென்றால், மைக்ரோஃபோனை இயக்கி, சாதனத்தின் சுற்றியுள்ள ஒலிகளையும் நிகழ்நேரத்தில் கேட்கலாம்.

அதுமட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள ஒலிகளும் பதிவாகும். பின்னர் இவைகள் பகுப்பாய்ந்து சேமிக்கப்படும். அதேபோல் போனில் அழைப்புகள் வந்தாலும், மைக்ரோபோன் தானாக இயக்க நிலைக்கு வந்துவிடும்.

இது, பதிவின் தரம் சாதனத்தின் மைக்ரோஃபோன் உணர்திறன், சுற்றியுள்ள சத்தம் மற்றும் சாதன மாதிரியைப் பொறுத்தது. பொதுவாக, மூன்று விதமாக ஒரு சாதனத்துக்குள் நுழைய முடியும். ஒரு குறுஞ்செய்தி வாயிலாகவும் சாதனத்தை தொடர்புகொள்ள முடியும். சாதனத்தின் கைரேகையைப் பெற பயனர் தொடர்பு ஈடுபாடு அல்லது செய்தி திறப்பு தேவையில்லை. யூஆர்எல் இணைப்பு மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க : டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!

Last Updated :Aug 17, 2021, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.