பெர்லின், கொரியா தற்போது உக்ரைன்: ரஷ்யாவின் போர் தந்திரம்

author img

By

Published : Feb 24, 2022, 10:50 PM IST

ரஷ்யாவின் போர் தந்திரம்

ரஷ்யா கடந்த காலங்களைப் போலவே, தற்போது உக்ரைன் மீது தந்திரமான போர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய நாட்டு அதிபர் புதின் இன்று (பிப்.24) உத்தரவிட்டார். இதன்படி ரஷ்யா, உக்ரைன் மீது இன்று காலை 5 மணியளவில் தாக்குதலைத் தொடங்கியது. இதையடுத்து வான்வழி, தரை வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவமும் மாறி,மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே யுகித்து உறுதியாக இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகள், ரஷ்யா வெறும் பிடிவாதக் கொள்கையைக் காட்டிக்கொண்டும், பின்பற்றிக்கொண்டும் இருப்பதாகவும் கருதினர்.

மேலும் உக்ரேனின் மூன்று பகுதிகளிலும் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் ராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருந்தன. இதனால் ரஷ்யப்போர் தொடங்காது என நம்பினர்.

இந்த சந்தேகத்திற்குப்பதிலளிக்கும் விதமாக ரஷ்யா இன்று குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்தப் போர் தந்திரம் கடந்த காலங்களிலிருந்து 'காப்பி' செய்யப்பட்டது தான் எனக் கூறுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொரியப்போர் மற்றும் பெர்லின் நெருக்கடியைக் கூறலாம்.

பெர்லின் நெருக்கடி

1948-49 பெர்லின் நெருக்கடியின்போது, சோவியத் பிரதமர் ஜோசப் ஸ்டாலின், இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற பிறகு, பெர்லின் மீதான சோவியத் நிலைப்பாடு என்ன என்பதை மேற்கத்திய நாடுகளை யூகிக்க வைத்தார். பெர்லின் ஒருங்கிணைந்த ஜெர்மன் தலைநகராக வேண்டுமா அல்லது பிரிக்கப்பட வேண்டுமா என சிந்திக்க வைத்தார்.

பின்னர், திடீரென்று 1949ஆம் ஆண்டு பெர்லினை முற்றுகையிட உத்தரவிட்டார். மேற்கத்திய நாடுகள் பெர்லினை பிடிப்பதைத்தடுக்கும் வகையில், ஸ்டாலின் உத்தரவிட்டார். இருப்பினும் ரஷ்யா அதன் பலவீனங்கள் காரணமாக தோற்றது. பெர்லின் நெருக்கடி நிகழ்வு பனிப்போர் தொடங்குவதற்கு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

கொரியப் போர்

இதேபோல் 1950ஆம் ஆண்டு கொரியப் போரில் ஸ்டாலினின் ரஷ்யப்படை எந்தப் பகுதியில் இருந்து போர் தொடங்கும் என்று அனைவரையும் யூகிக்க வைத்தது. ராணுவ இயக்கங்கள் போருக்குத் தேவையான டாங்கிகள், பீரங்கிகள், ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்த போதிலும், யாருக்கும் சந்தேகம் எழும்பாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

ஆகவே, இந்த வரலாற்றைப் பின்பற்றியே தற்போது ரஷ்யா உக்ரைன் மீது தந்திரமாகப் போர் தொடுத்துள்ளது. கடந்த காலங்களில் பெர்லின், கொரியப் போரின்போது எதிரிகளை யூகிக்க வைத்து தாக்கியதைப்போல், தற்போது நிகழ்த்தியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து, டான்பாஸ் பகுதியை இணைத்துக்கொள்ளலாம் அல்லது உக்ரைன் தலைநகர் கீவ்வில் அரசாங்கத்தை நிறுவலாம் எனக் கருதுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்கக்கூடும் - இந்தியாவிடம் கெஞ்சிய உக்ரைன் தூதர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.