இடா புயல் பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு

author img

By

Published : Sep 9, 2021, 4:56 PM IST

Hurricane Ida

அமெரிக்காவில் இடா புயல் காரணமாக இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு மாகணங்களில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மணிக்கு 230 கிமீ வேகத்தில் இடா புயல் கரையை கடந்தது. இந்த புயல் அமெரிக்க வரலாற்றில் ஐந்தாவது வலுவான புயலாகும்.

குறிப்பாக, இந்தப் புயலால் லூசியானா, மிசிசிப்பி பகுதிகள் மிகவும் சேதமடைந்துள்ளன. புயலின் கனமழைக் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நியூ ஆர்லியன்ஸ், ஹூஸ்டன் பகுதிகளில் தற்போது வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 44,000 குடும்பங்களில் அத்தியாவசிய தேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 6.7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3,200 வீடுகள் கடுமையாக சேதமடைந்ததால், அதிலிருந்தவர்கள் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "இந்தப் பேரிடர் நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாடு தயாராக உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அமெரிக்காவை புரட்டிப் போட்ட இடா புயல்... புகைப்படங்கள் உள்ளே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.