கடவுள் அருள் இருந்தால் அஜித், விஜய்யை இயக்குவேன் - எஸ்.ஜே.சூர்யா

author img

By

Published : Nov 22, 2022, 4:28 PM IST

Etv Bharatகடவுள் அருள் இருந்தால் அஜித், விஜய்யை இயக்குவேன் - எஸ் ஜே சூர்யா!

தமிழில் இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே. சூர்யா நடித்த ’வதந்தி’ இணையத் தொடரின் இசை வெளியீட்டுவிழாவில் பேசியபோது கடவுள் அருள் இருந்தால் விஜய் மற்றும் அஜித்தை இயக்குவேன் எனக்கூறியுள்ளார்.

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த தொடர் அமேசான் பிரைமில்
டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேடையில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ‘நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். நான் நடிப்பதற்குத் தான் வந்தேன். ஆனால், அது தற்போது தான் அமைந்துள்ளது. என்னுடைய உதவி இயக்குநர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மை நடக்கும்; பொய் பறக்கும் இது சாதாரணமாக ஊரில் உள்ளவர்கள் சொன்னது தான். இதை இந்தத்தொடரின் டேக் லைனாக கூட போடலாம். தமிழ்நாட்டில் எத்தனையோ வெப் தொடர்கள் வெளியாகி உள்ளன. ஒரு பெரிய திரைப்படத்திற்கு செய்த செலவு இந்த தொடருக்காக செய்யப்பட்டு உள்ளது’ எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, ‘என்னுடைய உதவி இயக்குநர் தான் என்னை இயக்குகிறார் என்பது தான் முதல் பாயின்ட். த்ரில்லர் என்றால் நிச்சயம் அதில் ஒரு பொழுதுபோக்கும் இருக்கும். நான் போராடி விழுந்து எழுந்து மீண்டும் போராடி வந்து தயாரிப்பாளர் ஆகி, இந்த கில் பில் திரைப்படத்தில் புதைத்துவிடுவார்கள் அல்லவா அது போல தான் நானும் வந்தேன். ஒரு மனுஷன் எவ்வளவு தான் போராடுவது.

காய்த்ரி - புஷ்கர்  தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடர்
புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடர்

நான் அடுத்து இயக்கும் படத்திற்கு கில்லர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது உண்மை தான். அதற்காகத் தான் புதிய காரை இறக்குமதி செய்துள்ளேன். என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை. கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்குவேன்’ என்றார்.

இதையும் படிங்க:அஜித்திற்காக துணிவு திரைப்படத்தில் பாடல் எழுதி உள்ளேன் - பாடலாசிரியர் விவேகா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.