எனது சொந்த முயற்சியில் என் மகன் லோகேஷை நடிகனாக முன்னேற வைத்தேன் - தந்தை ராஜேந்திரன் உருக்கம்

author img

By

Published : Oct 5, 2022, 5:43 PM IST

எனது சொந்த முயற்சியில் என் மகன் லோகேஷை நடிகனாக முன்னேற வைத்தேன்

எம்.ஆர். ராதாவின் தம்பி மகன்தான் தான் எனவும், ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் தனது மகனை நடிப்பில் முன்னேற வைத்ததாக தற்கொலை செய்துகொண்ட லோகேஷின் தந்தை ராஜேந்திரன் கூறினார்.

பிரபல 90’ஸ் தொடர்களான ஜீ பூம்பா, மர்ம தேசம், விடாது கறுப்பு உள்ளிட்ட தொடர்களிலும், கண்ணுபட போகுதையா உள்ளிட்ட திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர், லோகேஷ் ராஜேந்திரன். சுமார் 150-க்கும் மேற்பட்ட தொடர்களிலும், 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் லோகேஷ் எடிட்டிங், லைட் மேன் உள்ளிட்டப் பணிகளை செய்து கொண்டும் குறும்படத்தையும் இயக்கி வந்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு அனிஷா என்பவரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட லோகேஷ், பின்னர் தாம்பரம் மாடம்பாக்கத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி அனிஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் பிரிந்து நண்பர்களுடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

எனது சொந்த முயற்சியில் என் மகன் லோகேஷை நடிகனாக முன்னேற வைத்தேன் - தந்தை ராஜேந்திரன் உருக்கம்

மன உளைச்சலில் இருந்த லோகேஷ் மதுபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயக்க நிலையில் லோகேஷ் படுத்துக்கிடந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சி.எம்.பி.டி.போலீசார் லோகேஷின் உடலைக் கைப்பற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் லோகேஷ் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியைப் பிரிந்த லோகேஷ் மன உளைச்சலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சி.எம்.பி.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, லோகேஷின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்னை தான் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்னை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், அவரது மனைவி விவகாரத்துக்கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாக நடிகர் லோகேஷின் தந்தை ராஜேந்திரன் கூறினார்.

திருமணத்திற்குப்பின் தொடர்பை துண்டித்துக்கொண்ட லோகேஷ், இதுவரை இருமுறை மட்டுமே தன்னை சந்தித்தாக அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக சனிக்கிழமையன்று தன்னை சந்தித்த லோகேஷ் பணம் பெற்றுக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

எம்.ஆர். ராதாவின் தம்பி மகன்தான் தான் எனவும், ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் தனது மகனை நடிப்பில் முன்னேற வைத்ததாக அவர் கூறினார். லோகேஷ் உடலைப்பெற்ற பின் வில்லிவாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்ல உள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: 90’ஸ்-களின் பேவரைட் டிவி தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரமான லோகேஷ் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.