’கார்கி’ பட விழாவில் கண்கலங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

author img

By

Published : Jul 7, 2022, 5:15 PM IST

’கார்கி’ பட விழாவில் கண்கலங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

சாய் பல்லவி நடித்துள்ள ’கார்கி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி மேடையிலேயே கண்கலங்கினார்.

இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கார்கி’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட் மற்றும் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், சக்தி பிலிம்ஸ் சக்தி வேலன், 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, பேசும்போது மேடையிலேயே கண்கலங்கினார். படம் தாமதத்திற்கான காரணத்தை கூறும் போது அவர் கண்கலங்கினார். அவருக்கு சாய் பல்லவி மற்றும் இயக்குநர் இருவரும் ஆறுதல் தெரிவித்தனர். பின்பு தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ”சாய் பல்லவி இல்லாமல் இப்படம் சாத்தியமில்லை” என்றார்.

பின்னர் பேசிய சாய் பல்லவி, ”ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். கார்கி கதாபாத்திரத்தை நான் செய்தது மகிழ்ச்சி. இப்படத்தில் யாரும் சுயநலத்துடன் பணியாற்றவில்லை. இப்படத்தை பார்த்து சூர்யா‌ மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை வெளியிட முன்வந்துள்ளனர், அவர்களுக்கு நன்றி. என்னால் இதனை நம்பமுடியவில்லை, இருவரையும் நான் நேரில் பார்க்கும் போது எனக்கு எதுவுமே பேச வரவில்லை”, என்றார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் அப்டேட்: குந்தவையாக த்ரிஷா!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.