சொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...ஒருவர் பலி

author img

By

Published : Aug 19, 2022, 7:29 AM IST

Etv Bharசொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...ஒருவர் பலிat

சிவகாசி அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

விருதுநகர் : சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (52 )முருகேஸ்வரி (48) முருகன் (32) மணிகண்டன் (29) ராஜேஸ்வரி (24) விநாயகமூர்த்தி (22) ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர்.

சகோதர சகோதரிகளிடையே நீண்ட காலமாக குடும்ப சொத்து பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரச்சனை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் அழைத்துள்ளனர் . அதன் பேரில் அனைவரும் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் வாய் தவறாக ஏற்பட்டுள்ளது.

இதில் கம்பு, அரிவாள், கடப்பாறையால் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் முருகன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயங்களுடன் முருகன் மனைவி இந்திராதேவி, இந்திராதேவியின் தாயார் பெரியதாய், மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...ஒருவர் பலி

இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீஸார் கைது செய்து மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : ராமோஜி ஃபிலிம் சிட்டி மற்றும் ஐஆர்சிடிசி இடையே சுற்றுலா ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.