சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.. 4 பேர் கைது; 9 பெண்கள் மீட்பு!

author img

By

Published : Jan 24, 2023, 10:26 AM IST

Etv Bharatசென்னையில் ஹைடெக் விபச்சாரம்.. 4 பேர் கைது; 9 பெண்கள் மீட்பு!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஹைடெக் முறையில் விபச்சாரம் செய்து வந்த நான்கு பேரை கைது செய்த போலீசார், ஒன்பது பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை: வேலைத்தேடி சென்னைக்கு வரும் வட மாநில இளம்பெண்களைத் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வட மாநில பெண்களை வைத்து சிலர் விபச்சாரம் செய்வதாக துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ரெய்டு நடத்தினர்.

அப்போது, அங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கணேஷ்(22), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ பிரதாப் (24), திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் பாபு என்கிற ஹலாம் (28), மொனீர் உசேன் (29) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து, நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் அங்கு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட எட்டு வடமாநில பெண்கள் உட்பட ஒன்பது பேரை மீட்ட போலீசார், அவர்களை சென்னையில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை என்று கூறி ஏமாற்றும் நபர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.