வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை !

author img

By

Published : Jun 24, 2021, 3:41 PM IST

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை !

ஆற்காடு அருகே கூலித்தொழிலாளியின் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பூபாலன். கிளீனர் தொழில் செய்து வரும் இவர், கடந்த 20ஆம் தேதி பனையூரில் தன்னுடைய உறவினர் துக்க நிகழ்விற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஜூன். 23) நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

10 சவரன் நகை கொள்ளை

அப்போது பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

10 சவரன் நகை கொள்ளை

புகார் - விசாரணை

இதுதொடர்பாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் பூபாலன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.