திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நெடுங்கூர் கிராமத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் ஒரே இடத்தில், 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குரங்குகள் அனைத்தும் மந்தி வகையை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்து வரும் இவ்வகை மந்திகளின் தொல்லை தாங்காமல் விஷமிகள் சிலர் அடித்துக்கொன்று சத்தமில்லாமல் போட்டு விட்டு சென்றனரா அல்லது விஷம் வைத்த காய், கனிகளை தின்றதால் குரங்குகள் இறந்ததா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே உடற்கூறு ஆய்வுக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:98 வயதிலும் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாட்டி