கோவில்பட்டியில் கொரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Oct 4, 2022, 10:58 AM IST

Etv Bharat

கோவில்பட்டியில் கொரியர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 350 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சூரங்குடி காவல் நிலைய போலீசார் வேம்பார் சோதனைச்சாவடியில் நேற்று (அக்.3) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கொரியர் வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை சுமார் 15 கி.மீ. விரட்டிச் சென்று நிறுத்தினர். அப்போது கலைஞானபுரம் காட்டுப்பகுதியில், வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து போலீசார் வாகனத்தை சோதனையிட்டத்தில், அதில் சுமார் 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தையும், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதனை சூரங்குடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விவசாயிடம் ரூ. 10,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.