சேலத்தில் இரு சாதனைகள்: மூக்கில் பலூன் ஊதி அசத்திய மாணவி

author img

By

Published : Sep 19, 2021, 10:16 PM IST

Updated : Sep 20, 2021, 6:12 AM IST

சேலத்தில் இரண்டு சாதனை

சேலத்தில் மூக்கில் பலூன் ஊதி ஒரு பள்ளி மாணவியும், ஆணி பலகை மேல் நின்று பரதநாட்டியம் ஆடி ஒரு கல்லூரி மாணவியும் உலக சாதனைப் படைத்துள்ளனர்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் நோபல் உலக சாதனைக்கு தனித்தனியாக இன்று (செப். 18) முயற்சி செய்தனர்.

நெத்திமேடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் - கலைச்செல்வி ஆகியோரின் மகள் கனிஷ்கா. ஆறாம் வகுப்பு படித்து வரும் கனிஷ்கா, யோகாவின் மீது கொண்ட ஆர்வத்தால் பல்வேறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சாதனை நிகழ்த்திய மாணவிகள் தொடர்பான காணொலி

மாணவிகளின் சாதனை

அதன் ஒரு பகுதியாக நோபல் உலக சாதனை முயற்சியாக, பிராணயாமம் மூச்சுப் பயிற்சியில் 5 நிமிடத்தில் 86 பலூன்களை மூக்கில் ஊதி உலக சாதனை படைத்தார்.

அதே போல சங்கவி என்ற கல்லூரி மாணவி, பானை மீது ஐந்து நிமிடம் நின்று பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, சங்கவி ஆணி படுக்கையின் மீது ஐந்து நிமிடம் பரதநாட்டியம் ஆடி உலக சாதனையையும் படைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது .

இதையும் படிங்க: CSK vs MI: பதிலடி கொடுத்து முதல் இடத்திற்கு முன்னேறுமா மஞ்சள் படை!

Last Updated :Sep 20, 2021, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.