ஈரோட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

author img

By

Published : May 10, 2022, 1:00 PM IST

ஈரோட்டில் பூட்டை உடைத்து  65 சவரன் நகை கொள்ளை

கோபிசெட்டிபாளையம் அருகே தலைமையாசிரியர் வீட்டில் 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரில் இசபெல்லா ஜான்சிராணி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தலைமையாசிரியர் பணியாற்றி வருகிறார். . இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இசபெல்லா ஜான்சிராணி உள்ளே சென்று பார்த்த போது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 65 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

கொள்ளையர்கள் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த யூபிஎஸ் இணைப்பை துண்டித்து, கடப்பாரையால் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு : மோசஸ் உள்ளிட்ட இருவரிடம் 7.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.