வால்பாறை பிராய்லர் கோழிக் கடை அருகில் சிறுத்தை உயிரிழப்பு!

author img

By

Published : May 12, 2022, 1:36 PM IST

வால்பாறையை அடுத்த வரட்டுபாறை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் சிறுத்தை

வால்பாறை டாட்டா காபிக்கு சொந்தமான வரட்டுபாறை பகுதியில் பிராய்லர் கோழி கடையில் உள்ள கோழிக்கூண்டின் அருகே மர்மமான முறையில் ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது கிடந்தது.

கோவை: வால்பாறை டாட்டா காபிக்கு சொந்தமான வரட்டுபாறை பகுதியில் தேனீர் கடை மற்றும் பிராய்லர் கோழி கடை நடத்தி வருபவர் உஸ்மான். இவர் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் இரண்டு சென்ட் நிலத்தில் தேனீர் கடை மற்றும் பிராய்லர் கோழி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த உரிமையாளார் கோழிகள் வைத்திருக்கும் கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டு இருப்பது போல இருந்துள்ளதை பார்த்த அவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி ஃபாரஸ்ட் மணிகண்டன் மற்றும் சக்திவேல் விரைந்து வந்து சிறுத்தையின் உடலை கைப்பற்றி எடுத்துசென்றனர்.

மேலும் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோழியை பிடிப்பதற்காக சிறுத்தை வந்த பொழுது இறந்திருக்கலாம் எனவும், எதனால் உயிரிழந்தது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் உடற்கூறு ஆய்வுக்குப் பின் எப்படி உயிரிழந்தது என தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சிறுத்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.