Video: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் யானை; மீட்புப்பணிகள் தீவிரம்

author img

By

Published : Aug 2, 2022, 4:20 PM IST

யானை

தமிழ்நாடு-கேரள மாநில எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான, கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து - கேரளாவின் சாலக்குடி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஆறுகளில் இன்று (ஆக.2) கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 'பிள்ளப்பற' என்னும் இடத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. வெள்ளம் அதிகரிக்கவே, யானை உயிர்பிழைக்கப் போராடியது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய யானையை மீட்கும் பணி தீவிரம்

இதையும் படிங்க: கடல் சீற்றத்தில் சிக்கிய விசைப்படகு - வெளியான திக்திக் காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.