வ.உ.சிதம்பரனார், டாக்டர்.சுப்பராயன், ராமசாமி ரெட்டியார் படங்கள் இன்று திறப்பு!

author img

By

Published : Feb 23, 2021, 7:56 AM IST

open

சென்னை: வ.உ.சிதம்பரனார், டாக்டர்.சுப்பராயன், ராமசாமி ரெட்டியார் ஆகிய மூன்று பெருந்தலைவர்களின் திருவுருவப் படங்களை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார், சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர். சுப்பராயன், சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓ.பி.இராமசாமி ரெட்டியார் ஆகியோரது திருவுருவப் படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதிதாக மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பதன் மூலம், சட்டப்பேரவை மண்டபத்தில் உள்ள தலைவர்களின் பட எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளுவர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியார் ஆகிய 12 பேரின் படங்கள், சட்டப்பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் 'கடைசி' பட்ஜெட்: மீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.