விமான கழிவறையில் தங்க கட்டிகள் பறிமுதல்!

author img

By

Published : May 11, 2022, 11:00 PM IST

gold

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் கழிவறையிலிருந்து 3 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை: மும்பையிலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக, சுத்தம் செய்யப்பட்டது. விமான கழிவறையை சுத்தம் செய்தபோது, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து விமான ஊழியா்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

விமான பாதுகாப்பு அதிகாரிகள் பாா்சலை பிரித்து பாா்த்தபோது, அதனுள் 3 தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றை பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 3 தங்கக்கட்டிகளின் மொத்த எடை 350 கிராம் என்றும், அதன் மதிப்பு 16 லட்சம் ரூபாய் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில், இந்த விமானம் துபாயில் இருந்து மும்பைக்கு சா்வதேச விமானமாக வந்து, பின்பு மும்பையிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானமாக வந்துள்ளது தெரியவந்தது. எனவே இந்த தங்கக்கட்டிகள் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பப்ஜி மதனின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.