தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Oct 5, 2022, 6:38 PM IST

Updated : Oct 5, 2022, 7:46 PM IST

Etv Bharat

விஜயதசமியன்று மாணவ சேர்க்கைக்காக பள்ளிகளை திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை எனத்தெரியவந்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும். ஆனால், அந்நாளில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள்.

இதனால், விஜயதசமியன்று அரசு தொடக்க நிலைப்பள்ளிகள் மட்டும் மாணவர் சேர்க்கைக்காக திறக்க பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிடும். ஆனால், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்காக தொடக்க நிலை பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

சென்னை எழும்பூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
சென்னை எழும்பூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

இந்நிலையில், வழக்கம்போல சில அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்ப்பதற்காக திறந்து வைத்திருந்தனர். சென்னை எழும்பூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், எல்கேஜி வகுப்பில் புதியதாக மாணவர்கள் 10 பேர் இன்று சேர்க்கப்பட்டனர். அதேபோல் தமிழ்நாட்டில் பிறப் பள்ளிகளிலும் தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இதையும் படிங்க: விஜயதசமியையொட்டி நாகர்கோவிலில் நடந்த ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி
Last Updated :Oct 5, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.