பட்டாகத்தியுடன் பள்ளி மாணவர்கள்! பக்குவமாய் எடுத்துரைத்த போலீஸார்

author img

By

Published : Apr 21, 2022, 12:21 PM IST

பட்டாகத்தியுடன் பள்ளி மாணவர்கள்! பக்குவமாய் எடுத்துரைத்த போலீஸார்.

"லைக்குக்காகவே நாங்கள் இதை செய்தோம், எங்களைப் போல் லைக்கிற்கு ஆசைப்பட்டு யாரும் இதுபோல செய்ய வேண்டாம்" என பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு போலீசாரிடம் சிக்கிய 4 பள்ளி மாணவர்கள் கேட்டுக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை:சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில், வட சென்னை திரைப்பட BGM-க்கு பட்டாக் கத்தியுடன் 4 சிறுவர்கள் நடந்து வருவதுபோன்ற வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த 4 பேரும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அந்த 4 மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் லைக்குக்காக பட்டாக் கத்தியுடன் காணொளி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கையில் பட்டாக் கத்தி எவ்வாறு வந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாகத்தியுடன் பள்ளி மாணவர்கள்! பக்குவமாய் எடுத்துரைத்த போலீஸார்.

இந்நிலையில் காவல்துறையிடம் சிக்கிய பள்ளி மாணவர்கள் 4 பேரும் லைக்குக்காக யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தாங்கள் அனைவரும் லைக்குக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்த நிலையில், காவல்துறையினர் தங்கள் தவறை உணர்த்தியதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், காவல் துறையினர் தங்களைச் சிறார் மன்றங்களில் சேர்த்து தங்கள் வாழ்வைச் சரியான பாதையில் கொண்டு சேர்க்க வழிவகுப்போம் என உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சேலையூரில் சிற்றுண்டி கடையில் கஞ்சா விற்பனை செயதவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.