கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Nov 11, 2021, 7:33 AM IST

Updated : Nov 11, 2021, 7:39 AM IST

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரைக்காலுக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே இன்று மாலை தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதில், தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated :Nov 11, 2021, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.