ஜெயலலிதா இருந்திருந்தால் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் - ஆ.ராசா பேச்சு குறித்து ஜெயக்குமார் காட்டம்

author img

By

Published : Sep 26, 2022, 6:19 PM IST

பொன்முடியின் அப்பா வீட்டு காசில்தான் பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்களா?

ஆ.ராசாவின் விமர்சன பேச்சுக்கு தற்போது ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தோம். சென்னையில் இருந்து மாற்றுக் கட்சிகளிலிருந்து அதிமுகவில் சிலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும், தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை கண்டித்து எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மிக எழுச்சியாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களை
ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியுமா. திமுக அமைச்சர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல நினைத்துக் கொள்கின்றனர். அவர்கள் ஜமீன்கள், குறுநில மன்னர்களைப் நினைத்துக் கொள்கின்றனர். பதவி வந்ததும் அமைச்சர்களின் தோரணை மாறி உள்ளது.

ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா ஸ்டாலின்?
தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் திமுக அமைச்சர்கள் உள்ளனர். பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியது பெண் இனத்தையே அவமானப்படுத்தும் செயல். அரசாங்க பணத்தில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பொன்முடியின் அப்பா வீட்டு காசில்தான் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்களா? பல்கலைக்கழக ஆசிரியரிடம் எப்படி முகத்தை காட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியில் டிசம்பர் 6 என்றால் இஸ்லாமியர்கள் பயந்து நடுங்குவார்கள். ஜாதி மத கலவரங்கள் இல்லாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே அரசு அதிமுக. தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்த அரசை பார்த்து பயம் இல்லை. திராணி, திறன் இல்லாத அரசாக திமுக விளங்குகிறது. வெடிகுண்டு, கத்தி, கஞ்சா மற்றும் சூதாட்ட கலாச்சாரங்கள் திமுக ஆட்சியில் இன்றைக்கு நடைபெற்று வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பள்ளம் தோன்றியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். திமுக தோன்றிய பள்ளமே இவர்களுக்கு எமனாக மாறும், வடகிழக்கு பருவமழை வரும் போது இவர்களின் ஆட்சியின் லட்சணத்தை பார்ப்போம். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரிச்சனைகள் உள்ளது. அதில் கவனம் செலுத்தாமல் மனுதர்மம் போன்ற விஷயங்களை பற்றி பேசி மக்களை திசை திருப்புகின்றனர். மின்சார விலையேற்றத்தால் யாரும் பாதிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருப்பது மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

இந்தியாவில் மனுஸ்மிருதி ஆட்சியா நடக்கிறது? சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது. மக்கள் விலைவாசி உயர்வால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விவாதிக்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கும் போது தேவையற்ற சர்ச்சை கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார். நேர்மையான, விருப்பு வெறுப்பற்ற அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார் என்றால் ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: சிசிடிவி: தாம்பரம் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.