விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Nov 25, 2021, 1:20 PM IST

Tamil Nadu Chief Minister MK Stalin

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு இடையே தற்காலிக கோவிட் கால 'விமான போக்குவரத்துச் சேவை' தொடர்பாக உடன்படிக்கை செய்துகொள்ளுமாறு கடிதம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ளார்.

சென்னை: இது குறித்து ஸ்டாலின், விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமான போக்குவரத்துச் சேவை உடன்படிக்கை ஒப்பந்தம் செய்துகொள்ளாததால் அந்நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர நேரடி விமான சேவை இல்லாமல் துபாய், தோகா, கொழும்பு வழியாக மாற்றுப் பாதைகளில் வருவதால் பல்வேறு இன்னல்களுடன் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு இடையே தற்காலிக கோவிட் கால 'விமான போக்குவரத்துச் சேவை' தொடர்பாக உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Farm Laws: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.