வெடித்து சிதறிய சரவண பவன் ஹோட்டல் ஏசி சிலிண்டர்.. ஒருவர் படுகாயம்..

author img

By

Published : Sep 27, 2022, 4:53 PM IST

Etv Bharat

சென்னை அருகே சரவண பவன் ஹோட்டலில் ஏசி கியாஸ் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை: போரூர்-ஆற்காடு சாலை, சப்தகிரி நகரிலுள்ள சரவண பவன் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட ஏசி கியாஸ் வெடிப்பால் 3 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சரவண பவனில், ஏசி மெக்கானிக் மணிகண்டன், கிரிஷ் குமார், பாலமுருகன், ஆனந்த முருகன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று (செப்.27) சரவண பவனில் உள்ள ஏசி கியாஸைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் ஏசியிலிருந்த கியாஸ் வெடித்து சிதறியது.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன், கிரிஷ் குமார், பாலமுருகன், ஆனந்த முருகன் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே ஹோட்டலின் பிற ஊழியர்கள் காயமடைந்த நால்வரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். இதில் மணிகண்டன் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் களைகட்டிய தசரா...மின்னொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய கட்டடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.