எஸ்.பி.வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

author img

By

Published : Sep 20, 2022, 7:33 PM IST

இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்டத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர், சென்னை மற்றும் கோவை பிரிவுகளில் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி எஸ்.பி. வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றும், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராகத் தடை இல்லை என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதிகள், வழக்கை எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இறைவன் முன் அனைவரும் சமம்.. யாருக்கும் முதல் மரியாதை கிடையாது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.