முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!

author img

By

Published : Feb 4, 2021, 3:57 PM IST

Updated : Feb 4, 2021, 4:19 PM IST

vijayabaskar

சென்னை: முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, அரசால் அமைக்கப்பட்டு வரும் அம்மா மினி கிளினிக்குகளை கிராமப்புறங்களின் தேவைக்கேற்ப மேலும் அதிகரிக்க வேண்டும் எனக் கோரினார். மேலும், அடிக்கடி மக்களை சந்திக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தற்போது வரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 951 பேர் அம்மா மினி கிளினிக் மூலம் பயன் பெற்றுள்ளனர். மினி கிளினிக்குகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். அதே போல மாநிலத்தில் தற்போது வரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அடுத்தக்கட்டமாக உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை என பல துறைகளில் உள்ள 8 லட்சம் முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரும். அதன்பின் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!

இதையும் படிங்க: ’7 பேர் விடுதலை! - ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்’

Last Updated :Feb 4, 2021, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.