சென்னையில் ஆளுநர் நடத்தும் உயர்கல்வி மாநாடு!

author img

By

Published : Aug 3, 2022, 12:42 PM IST

சென்னையில் ஆளுநர் நடத்தும் உயர்கல்வி மாநாடு

தேசிய தரவரிசை 2022 அடிப்படையில் ‘தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்குவது தொடர்பான மாநாட்டை நடத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தேசிய தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2022 அடிப்படையில் ‘தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநாட்டை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவன் ஏற்பாடு செய்கிறது. அதில் தேசிய தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாடு ஆளுநரும், வேந்தருமான ஆர்.என்.ரவி பாராட்டுவார்.

மேலும் மாநாட்டின் போது, ​​தேசிய தரவரிசையில் சிறந்து விளங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து தமிழ்நாட்டில் இருந்து தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல்கலைக்கழகங்கள் , நிறுவனங்கள் விளக்கமளிக்கும்.

இந்த மாநாட்டில் பங்கேற்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் செயலாளர், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 3 சீன நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.