இந்த தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

author img

By

Published : Oct 5, 2022, 5:48 PM IST

இந்த தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம்.

அதன்படி, சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி 2ஆம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 விழுக்காடு சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2021 -22ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை

https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/

என்ற இணையதளம் வழியாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் தொகுதியில் 36 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.