புதிய சீரிஸ் 50 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்கு விடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி சீரிஸ் என்ற பெயரில் புதிய ரக 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன.
இந்த நோட்டுகளில் அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கையெழுத்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பழைய நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குறிப்பை ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் தெரிவித்துள்ளார்.