விமானப் போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு

author img

By

Published : Sep 19, 2021, 7:17 AM IST

Updated : Sep 19, 2021, 7:54 AM IST

airlines

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வளித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பொது முடக்கம் கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. 2020 ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பொது போக்குவரத்து முற்றாக முடங்கிய நிலையில், மே மாத இறுதியில்(மே 25) குறைந்த பயணிகளுடன் விமானங்களை இயக்க அரசு அனுமதி அளித்தது.

முதற்கட்டமாக மொத்த உள்நாட்டு விமானங்களில் 50 விழுக்காடு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பின் 72.5 விழுக்காடு விமானங்களை இயக்க அரசு அனுமதி அளித்தது.

தற்போது, இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்துள்ளதால், கூடுதல் தளர்வுகளுக்கு அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு விமான இயக்கத்தை 72.5ல் இருந்து 85 விழுக்காடாக உயர்த்தி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. கடந்த இரு மாதங்களாக விமானப் போக்குவரத்து துறை இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் புள்ளிவிவரத்தின்படி, ஜூலை மாதத்தில் 50 லட்சம் பயணிகள் விமான போக்குவரத்து மேற்கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 67 லட்சமாக உயர்ந்துள்ளது.

அரசின் தற்போதைய கூடுதல் தளர்வு காரணமாக செப்டெம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆம்ஃபிபியஸ் வாகனங்கள் உருவாக்குவதில் மேம்பட்டுள்ளோம் - மகேந்திரா கேலி

Last Updated :Sep 19, 2021, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.