மதரஸா உள்பட பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்

மதரஸா உள்பட பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய கல்விக் கூடங்களான மதரஸா உள்பட அனைத்து பள்ளிக் கூடங்களிலும் தேசிய கீதம் கட்டாயம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ: இஸ்லாமிய கல்விக் கூடங்களான மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன் தேசிய கீதம் பாடுவதை உத்தரப் பிரதேச மதர்ஸா கல்வி வாரிய கவுன்சில் கட்டாயமாக்கியுள்ளது.
மதரஸாக்கள் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. அந்த உத்தரவின்படி, மதரசாக்களில் படிப்பு தொடங்கும் முன் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த் உத்தரவின்படி வியாழக்கிழமை (மே12) முதல் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடத் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு
