விவகாரம் முடியும்வரை மாணவர்கள் ஹிஜாபோ காவியோ அணியத்தடை: கர்நாடக உயர் நீதிமன்றம்

author img

By

Published : Feb 11, 2022, 10:12 AM IST

Updated : Feb 11, 2022, 10:37 AM IST

விவகாரம் தீரும் வரை மாணவர்கள்,ஹிஜாபோ காவியோ அணியத் தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம்

கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணியத் தடை விதித்த விவகாரம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வரை மாணவர்களுக்கு ஹிஜாபோ காவியோ அணிய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெங்களூரு: ஹிஜாப் விவகார வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு ஹிஜாபோ,காவியோ அணியத் தடை விதித்துள்ளது.

இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் வரை இது தொடரும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை, நேற்று(பிப்-10)அன்று தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, கிருஷ்ணா மற்றும் நீதிபதி காஜி ஜைபுன்னேஷா மொகைதீன் ஆகிய மூவரின் அமர்வில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலத்தில் அமைதி நிலவி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துக்கொண்டனர்.

இதனையடுத்து வரும் திங்கள்(பிப் 14) அன்று 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Hijab Issue: பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றது' - இந்தியா கடும்கண்டனம்!

Last Updated :Feb 11, 2022, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.