Sexual harassment: கேரள விமான நிலைய அலுவலர் பணியிடைநீக்கம்

author img

By

Published : Jan 15, 2022, 5:23 PM IST

Sexual harassment:கேரள விமான நிலைய அலுவலர் பணியிடைநீக்கம்

Sexual harassment: அதானி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை சக உயர் அலுவலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Sexual harassment: திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரியும் உயர் அலுவலர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாட்டு அலுவலர் (Operating Officer) மதுசூதன கிரி ராவ் மீது அங்கே ஒரு மாதமாகப் பணிபுரியும் பெண் ஒருவரால் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், ராவ் தன்னை அவரது இல்லத்திற்கு வரவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி நடந்தேறியதாகத் தெரிகிறது.

மதுசூதன ராவ் இதற்கு முன்பு செகந்தராபாத் விமான நிலையத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. விமான அலுவலர்கள், மதுசூதன ராவை பணியிடைநீக்கம் செய்ததாகவும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இதற்கான விசாரணையை புகாரளித்த பெண்ணிடமிருந்து தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.