தடுப்புச்சுவரில் மோதிய கார்: 7 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 14, 2022, 12:01 PM IST

Seven people killed road accident in Davangere  Seven people killed as car hits divider in Davangere of Karnataka  Six died on the spot  One died while shifting to a hospital  கார் விபத்து  கர்நாடகாவில் கார் விபத்து  தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து  கார்நாடக கார் விபத்தில் ஏழு பேர் பலி

கர்நாடக மாநிலம் ஜகளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை கார் தடுப்புச் சுவரில் மோதியதில், ஏழு பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா: ஜகளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன 14) அதிகாலை கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த தாவணகரே காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, “உயிரிழந்த அனைவரும் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் வசிப்பவர்கள். இவர்கள் பெங்களூரில் இருந்து தோஸ்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை” என்றனர்.

இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை தாவணகரே காவல் கண்காணிப்பாளர் சிபி ரிஷ்யந் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: மது போதையில் பெண்களிடம் தகராறு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.