மீண்டும் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க.. சஜித் பிரேமதாச கோரிக்கை நிராகரிப்பு!

author img

By

Published : May 12, 2022, 8:03 PM IST

ரணில் விக்கிரமசிங்கே

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் அதிபர் கோத்தபய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சவின் கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று (மே 12) இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றார்.

வரும் 16ம் தேதி இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 15 புதிய அமைச்சர்கள் நாளை (மே13) பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சஜித் பிரேமதாச பிரதமர் ஆக தயார் என அறிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - மகிந்த ராஜபக்சவுக்கு அதிரடி உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.