நடைப்பயணம் செய்வோருக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் வித்தியாசம் தெரியாது - பிரதமர் மோடி

author img

By

Published : Nov 21, 2022, 8:33 PM IST

பிரதமர் மோடி

நாட்டு மக்களால் ஆட்சியிலிருந்து தூக்கியெறிப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள் என்று பிரதமர் மோடி கங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சாடினார்.

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் நேரடி பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், சுரேந்திரநகரில் தேர்தல் பரப்புரையில் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வளர்ச்சி பற்றி பேசுவதற்கு பதிலாக, என்னுடைய அந்தஸ்து பற்றி பேசி வருகிறார்கள். அவர்களைப்போல நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஒரு வேலைக்காரன் மட்டுமே. எனக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது. இந்த அந்தஸ்து விளையாட்டை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இப்போது மீண்டும் ஆட்சியை பிடிக்க நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது.

குஜராத்தில் நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் வாக்கு கேட்க எந்த முகத்துடன் வருவார்கள். நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். நர்மதா திட்டத்தை பல தசாப்தங்களாக முடக்குவதற்கு அனைத்தையும் செய்தார்கள். உலக வங்கியில் இருந்து எந்தப் பணமும் குஜராத்திற்கு வராமல் தடுத்தார்கள். அதையெல்லாம் முறியடுத்து நர்மதா திட்டத்தை செயல்படுத்துவேன் என்று சபதம் செய்தேன். அதையே செய்துகாட்டினேன் எனத் தெரிவித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அருண் கோயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.