மெட்ரோ நீட்டிப்பு பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

author img

By

Published : Feb 21, 2021, 7:34 PM IST

மோடி

கொல்கத்தா: நோபரா - தக்ஷிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயிலின் நீட்டிப்பு பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நோபரா - தக்ஷிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயிலின் நீட்டிப்பு பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மோடி, ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக கொல்கத்தா மெட்ரோவின் செய்தி தொடர்பாளர் இந்திராணி பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நோபரா - தக்ஷிணேஸ்வர் இடையே உள்ள 4.1 கிமீ தூரத்தை இணைக்கும் இந்த மெட்ரோ திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தக்ஷிணேஸ்வர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த இணைப்பின் மூலம் பயன்பெறவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.