புதுச்சேரியில் கேஎஃப்சி பர்கரில் இருந்த கையுறையால் அதிர்ச்சி..

author img

By

Published : Sep 13, 2022, 8:06 PM IST

Etv Bharat

புதுச்சேரியில் கேஎஃப்சி சிக்கன் உணவகத்தில் பர்கரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கையுறை இருந்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறையினர் அவ்வுணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

புதுச்சேரி: கேசிஎஃப் சிக்கன் உணவகத்தில் பர்கரில் பிளாஸ்டிக் கையுறை இருந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட் என்பவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரியிலுள்ள ஒரு கேஎஃப்சி சிக்கன் (KCF chicken) உணவகத்தில் இன்று (செப்.13) பர்கர் ஆர்டர் செய்ததாகவும் அப்போது அவருக்கு வழங்கிய பர்கரில், பிளாஸ்டிக் கை உறையின் துண்டு ஒன்று இருந்ததாகவும் கூறுகிறார்.

இது குறித்து அக்கடையின் ஊழியர்களிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்ட ஊழியர்கள் வேறு ஒரு பர்கர் தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு மறுத்து விட்டதாக தெரிவித்த டேவிட், இதுகுறித்து விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறையில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

கேஎஃப்சி சிக்கன் உணவகத்தில் பர்கரில் இருந்த கையுறையால் அதிர்ச்சி

இதுதொடர்பாக, ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கேசிஎஃப் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று ஆரணியில் பீட்ரூட்டில் எலியின் தலை, இன்று பர்கரில் கையுறை என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் உணவகங்களின் தரம் குறித்த கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டு வரப்படுகின்றன - பிரதமரின் பிறந்தநாளில் காடுகளில் விடத்திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.