கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

author img

By

Published : Aug 2, 2022, 1:03 PM IST

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு வந்த கேரள நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்: குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பதிவாகிவருகிறது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு முதலாவதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவில் பதிவானது. இதையடுத்து, டெல்லியிலும் பதிவாகியது.

அந்த வகையில், கேரளாவில் 4 பேருக்கும் டெல்லியில் 2 பேருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 வயதான நபர் மலப்புரத்தை சேர்ந்தவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூலை 27 கோழிக்கோடு வந்தார். அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆக 2) குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவில் மட்டும் 5 பேருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதும், இதில் ஒருவர் ஜூலை 31ஆம் தேதி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.