உ.பி.யில் நிர்வாணமாக நடந்து சென்ற சிறுமி - நடந்தது என்ன?

author img

By

Published : Sep 22, 2022, 9:09 AM IST

நிர்வாணமாக நடந்து சென்ற சிறுமி - உத்திரபிரதேசத்தில் நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தில் நிர்வாணமான நிலையில் சிறுமி ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியானது நிலையில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 1 அன்று அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அருகில் இருந்த இடத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இடத்தை நோக்கி வர, ஐந்து பேரும் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து சிறுமி ஆடையின்றி நிர்வாணமாக வீட்டிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற சிறுமியின் வீடியோவை, ஒரு பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியான நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உயர் காவல் அலுவலரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, ஒருவரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 5 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் ; 31 ஆண்டுகளுக்கு பின் ஓர் பெண் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.