சஞ்சய் ராவத்திற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

author img

By

Published : Aug 4, 2022, 3:42 PM IST

court

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திற்கு வரும் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியை மாற்றியமைப்பதில் நிதி முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த 31ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 4ஆம் தேதி(இன்று) வரை அவரை அமலாக்கத்துறை காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காவல் முடிவடைந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சஞ்சய் ராவத்தின் காவலை வரும் 8ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ராவத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது - அமலாக்கத்துறை அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.