பாம்பை வைத்து மனைவியைக் கொலைசெய்த வழக்கில் திருப்பம்

author img

By

Published : Oct 11, 2021, 3:55 PM IST

Updated : Oct 11, 2021, 5:20 PM IST

man for killing wife using snake

கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொலைசெய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் தனது மனைவி உத்ராவை பாம்பைப் பயன்படுத்தி கொலைசெய்ததாக 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், சூரஜ் திருமணத்திற்காக 100 பவுன் நகை, கார் உள்ளிட்டவைகள் வரதட்சணையாக பெற்றதும். இருப்பினும் உத்ராவிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திவந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், திட்டமிட்டு பாம்பை பயன்படுத்தி உத்ராவைக் கொலை செய்து, விபத்து என நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று கொல்லம் நீதிமன்றம், சூரஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்களை அக்.13ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

Last Updated :Oct 11, 2021, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.