ஹிஜாப் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Sep 22, 2022, 4:35 PM IST

Karnataka

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைக் குறிக்கும் உடைகளை அணியத்தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில், செப்டம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று(செப்.22) மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க:ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.