புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் திங்கட்கிழமை (மார்ச் 29) புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார்.
புதுச்சேரி நகரப் பகுதி, ஆம்பூர் சாலையில் தனது பரப்புரையை வேனில் இருந்தவாறு பேசினார். அப்போது 15 நிமிடங்களாக, அவரது மைக் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. எவ்வளவு முயற்சித்தும் மைக் வேலை செய்யாததால், அவரால் பேச முடியவில்லை.
பின்னர், கையில் வைத்திருந்த டார்ச் லைட்டைக்காட்டி, அங்கு கூடியிருந்த மக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஒருகட்டத்தில் கோபமான கமல், கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை வேனுக்குள் வீசி அடித்தார்.
இதனால் அங்குக் கூடியிருந்த அவரது ரசிகர்கள் மைக்கை சரி செய்யக்கோரி கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பேசாமல் டார்ச் லைட் சின்னத்தைக் காட்டி, வாக்களிக்குமாறு சமிக்கை செய்து புதுச்சேரியின் மற்ற பகுதிகளுக்கு பரப்புரைக்குப் புறப்பட்டார்.
இதையும் படிங்க: இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்பூ