நாடு முழுவதும் மேலும் 16,103 பேருக்கு கரோனா... 31 பேர் உயிரிழப்பு...

author img

By

Published : Jul 3, 2022, 4:16 PM IST

நாடு முழுவதும் மேலும் 16,103 பேருக்கு கரோனா... 31 பேர் உயிரிழப்பு...

நாடு முழுவதும் மேலும் 16,103 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளாகவும், 31 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நாளொன்றுக்கு கூடுதலாக 2,143 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429ஆக அதிகரித்துள்ளது. மறுப்புறம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,25,199ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 1,47,934 பேரும், கேரளாவில் 70,037 பேரும், கர்நாடகாவில் 40,119 பேரும், தமிழ்நாட்டில் 38,026 பேரும், டெல்லியில் 26,266 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 23,540 பேரும், மேற்கு வங்கத்தில் 21, 222 பேரும் அடக்கம்.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 13,929 பேர் குணமடைந்தனர். அந்த வகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,65,519ஆக உயர்ந்துள்ளது. விகிதம் 98.54 சதவீதமாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 7000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.