கொல்கத்தா: கொல்கத்தா தொழிலதிபர் அபிஜித் சென்னுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (மே 11) காலை திடீர் ரெய்டு நடத்தினர். நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள அபிஜித் சென்னின் வீடு, தொழிற்சாலை உள்பட அவரது அனைத்து சொந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக நிதி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அபிஜித் கட்டுமான தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டது. அபிஜித் சென்னுக்கு சொந்தமான தொழிற்சாலைகள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலும் மற்றொரு கிளை ஜோதப்பூர் பூங்காவிலும் இருப்பதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நூறு கோடி கணக்கான நிதி மோசடி வழக்கில் சிக்கிய அபிஜித் சென்னிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுவற்றுக்குள் வெள்ளிக்கட்டி... தரைக்கடியில் கோடிக்கணக்கில் பணம்... வாய் பிளந்த அலுவலர்கள்!