மேலும் ஐந்து நாள்கள் ஆர்யன் கானுக்கு சிறைவாசம்

author img

By

Published : Oct 14, 2021, 6:40 PM IST

ஆர்யன் கானுக்கு சிறைவாசம்

ஆர்யன் கான் பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையில் அக்டோபர் 20ஆம் தேதி உத்தரவு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்.3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

14 நாள் நீதிமன்ற காவலில் உள்ள ஆர்யன் கான் தரப்பில் பிணை கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி வி வி பாட்டில் வழக்கு விசாரணை தொடர்பான உத்தரவை அக்டோபர் 20ஆம் தேதி வழங்குவதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஆர்யன் கானின் சிறைவாசம் மேலும் ஐந்து நாள்கள் நீடிக்கவுள்ளது. முன்னதாக அக்டோபர் எட்டாம் தேதி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஆர்யன் கான் தாக்கல் செய்த பிணை மனுவை தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: இந்திரா காந்தியை போற்றிப் பாராட்டிய ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.