டெல்லி போலீஸ் முன் பாகுபலி நடிகை ஆஜர் - பண மோசடி வழக்கில் விசாரணை

author img

By

Published : Sep 15, 2022, 7:09 PM IST

Nora Fatehi

பண மோசடி வழக்கு விசாரணைக்காக, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். இரண்டாவது முறையாக இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

சுகேஷ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜாக்குலினுக்கு, மோசடி செய்து பறித்த பணத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்று(செப்.14) நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, இன்று (செப்.15) டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி, நடிகை நோரா ஃபதேஹியிடம், சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காததால் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த பணத்தில், நடிகை நோரா பதேஹிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்திருந்தது. நோரா பதேஹி இந்தி மட்டுமின்றி பாகுபலி திரைப்படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இதையும் படிங்க: குஜராத் கடல் பகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.