நடுரோட்டில் வயதான ஆசிரியரை தாக்கிய பெண் காவலர்கள் - பீகாரில் நடந்தது என்ன?

author img

By

Published : Jan 22, 2023, 11:08 AM IST

Etv Bharat

பீகார் மாநிலம் கைமூரில் சாலையில் வயதான ஆசிரியர் ஒருவரை இரு பெண் காவலர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கைமூர்: பீகார் மாநிலம், கைமூர்(Kaimur) மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான ஆசிரியர் நாவல் கிஷோர் பாண்டே. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமையன்று சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த ஆசிரியர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

ஆசிரியர் நாவல் கிஷோர் சாலையில் விழுந்ததால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. போக்குவரத்து பாதிப்பால் ஆத்திரமடைந்த பெண் காவலர்கள் வயதான நபர் என்றும் பாராமல் நாவல் கிஷோரை லத்தியை கொண்டு கொடூரமாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அவர் கத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, கொடூரமாக நடந்துக்கொண்ட காவலர்கள் மீது பீகார் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

  • Bihar: Video of two woman constable thrashing an elderly teacher in Kaimur district goes viral on social media

    As soon as the matter came to our notice,SDPO Bhabua asked to probe it&submit the report within 24 hours. Action will be taken on the basis of report: Kaimur SP (21.1) pic.twitter.com/uorbA6upoq

    — ANI (@ANI) January 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 24 மணிநேரத்திற்குள் அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் மோகன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரேயொரு பொய்யால் புதுமாப்பிள்ளைக்கு ஆப்பு.. வரதட்சணையால் வந்த ட்விஸ்ட்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.