தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!

author img

By

Published : May 5, 2022, 1:12 PM IST

Updated : May 5, 2022, 3:03 PM IST

வயிற்றுக்குள் 109  போதை காப்ஸ்யூல்கள் வைத்திருந்த பயணி- தெலுங்கானா விமான நிலையத்தில் பரபரப்பு!

தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் வயிற்றுக்குள் 109 ஹெராய்ன் கேப்ஸ்யுல்களை மறைத்து வைத்திருந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சம்சாபாத் விமான நிலையத்தில் ஏப்.26ஆம் தேதியன்று தான்சானியா செல்லும் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் குடியுரிமை அலுவலர்கள் சோதித்தனர்.

அப்போது அவரது வயிற்றில் இருந்து ஹெராயின் போதை மருந்துகள் கேப்ஸ்யுல்களாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவரின் உதவியுடன் அவரது வயிற்றில் இருக்கும் கேப்ஸ்யுஸ்ல்களை அகற்றினர்.

மொத்தம் 1,389 கிராம் மதிப்பிலான கேப்ஸ்யுல்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ 11.53 கோடி என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!

இதையும் படிங்க:தென்காசியில் முதியவர் கழுத்தை நெரித்துக் கொலை; தீவிர விசாரணையில் போலீஸ்!

Last Updated :May 5, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.